“தோற்றால் உயிரை விட்டு விடுவேன்… முடிவு உங்கள் கையில்?” – விஜயபாஸ்கரின் மிரட்டல் போஸ்டர்!

 

“தோற்றால் உயிரை விட்டு விடுவேன்… முடிவு உங்கள் கையில்?” – விஜயபாஸ்கரின் மிரட்டல் போஸ்டர்!

விராலிமலையில் கடந்த இரு தேர்தல்களில் வெற்றிபெற்றதால் ஹாட்ரிக் வெற்றிபெற அமைச்சர் விஜயபாஸ்கர் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ள திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் படுபயங்கரமாக டஃப் கொடுத்துள்ளார். இது ஒருபுறமிருக்க தொகுதியிலுள்ள 30 ஆயிரம் முத்தரையர் வாக்குகளைக் கவர அதிமுக சேர்ந்தவரே சுயேச்சையாக நிற்க, அமமுக அதிமுகவின் ஓட்டை பிரிக்க, ஐடி ரெய்டு காலை சுற்ற விஜயபாஸ்கர் சின்னாபின்னமாகி போயுள்ளார்.

“தோற்றால் உயிரை விட்டு விடுவேன்… முடிவு உங்கள் கையில்?” – விஜயபாஸ்கரின் மிரட்டல் போஸ்டர்!

எங்கே தனது வெற்றி பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் அவரின் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் வெளிப்படுகிறது. பிரச்சாரத்தில் பழனியப்பன் கண் கலங்கி, தன்னை வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தோற்றால் உயிரை விட்டுவிடுவேன் என்றும் மக்களிடம் கூறினார். இந்த விஷயம் எட்டுத்திக்கும் பரவி ஓட்டாக மாற, விஜயபாஸ்கரும் ஒரு ஸ்டன்ட் போட்டார். அவரும் எனக்கு பிபி, சுகர் இருக்கிறது… இருந்தாலும் உங்களுக்காக உழைக்கிறேன் என அனுதாபத்தைத் தேடினார். தாய்மார்களின் வாக்குகளைக் கவர தனது இரு மகள்களையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

“தோற்றால் உயிரை விட்டு விடுவேன்… முடிவு உங்கள் கையில்?” – விஜயபாஸ்கரின் மிரட்டல் போஸ்டர்!

இச்சூழலில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்டரும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில், “வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டுக் கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறும்பொழுது, 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்டகாலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்? – முடிவு உங்கள் கையில்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜயபாஸ்கர் சோகமாக இருக்கும்படியான புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.