‘எந்திரன் 3’ படமெடுத்தால் ரோபோ பெயர் ‘சேகர் பாபு’ – காங்கிரஸ் நிர்வாகி கலகல பேச்சு!!

 

‘எந்திரன் 3’ படமெடுத்தால் ரோபோ பெயர் ‘சேகர் பாபு’ – காங்கிரஸ்  நிர்வாகி கலகல பேச்சு!!

எந்திரன் -3 படம் எடுக்க நேர்ந்தால் ரோபோவுக்கு சேகர்பாபு என பெயர் வைக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி கூறியுள்ளார்.

‘எந்திரன் 3’ படமெடுத்தால் ரோபோ பெயர் ‘சேகர் பாபு’ – காங்கிரஸ்  நிர்வாகி கலகல பேச்சு!!

சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், துறைமுகம் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திமுக எம்எல்ஏ சேகர்பாபுவை புகழ்ந்து பேசினார். அப்போது பேசிய அவர்,
ஒரு தொகுதியின் பாதுகாவலர் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும் .அவர் எல்லா மக்களையும் நேசிக்கிற, அன்பு பாராட்டுகிறார் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருக்கவேண்டும். அவர்தான் தலைவனாக இருக்க முடியும் .ஒவ்வொரு தொகுதி மக்களின் விருப்பமும் அதுதான். அப்படி ஒரு வேட்பாளர் கிடைக்கவில்லையே என மக்கள் ஏங்குவார்கள். அப்படி மக்கள் விரும்பும் ஒரு தலைவராக இருக்கிறார் துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபு.

‘எந்திரன் 3’ படமெடுத்தால் ரோபோ பெயர் ‘சேகர் பாபு’ – காங்கிரஸ்  நிர்வாகி கலகல பேச்சு!!

இந்த தொகுதியில் முன்னாள் தலைவர் மு .கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் வரிசையில் சேகர்பாபு வெற்றியை தக்க வைத்து வருகிறார் . உழைப்பிற்கு அஞ்சாதவர்; இவரது உழைப்பு ரோபோவை போன்றது. எந்திரன் திரைப்படத்தில் ரோபோவுக்கு சிட்டிபாபு என்று இயக்குநர் ஷங்கர் பெயரிட்டார் . மூன்றாவது பாகம் எடுத்தால் ரோபோவுக்கு சேகர்பாபு என பெயரிட வேண்டும். அது பொருத்தமாக இருக்கும் . அந்த அளவுக்கு தொகுதிக்கு ரோபோ போல உழைத்து வருகிறார் சேகர்பாபு” என்றார்.