“மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

“மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ஜோ பைடன் 2 விரல்களை காட்டுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

“மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டங்களில் மூலம் மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே இரண்டு முறை அவரால் முதல்வராக ஆகாத போது அவர் மகனால் எப்படி முதல்வராக முடியும்? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால் அவர்களே இப்போது நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறார்கள்.

“மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதேபோல் நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும் திமுகவின் தூண்டுதலால் தான் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு முதல்வர் பழனிசாமியால் தான் கிடைத்துள்ளது. அதேபோல் தமிழக வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீட்டையும் முதல்வர் பழனிசாமி பெற்று தந்துள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த பொங்கலுக்கு ரூ. 5 ஆயிரம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ஜோ பைடன் 2 விரல்களை காட்டுகிறார்” என்றார்.