“திமுக கூட்டணிக்கு அடிபணிந்து இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகிறார்கள்”

 

“திமுக கூட்டணிக்கு  அடிபணிந்து  இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகிறார்கள்”

வாக்கு வங்கிக்காக திமுக கூட்டணிக்கு அடிபணிந்து சில இஸ்லாமிய தலைவர்கள் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.

“திமுக கூட்டணிக்கு  அடிபணிந்து  இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகிறார்கள்”

மதுரையில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ராம ஜென்மபூமி நிதி சமர்ப்பண ரதயாத்திரை தொடங்கப்பட்டது இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் பேசும்போது,வன்முறையை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.

“திமுக கூட்டணிக்கு  அடிபணிந்து  இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகிறார்கள்”

“காவல்துறை ஒருசிலருக்கு பயந்து மதநல்லிணக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய எங்களை போன்றவர்களை தடுக்கிறது. இஸ்லாமிய மக்கள் எந்த ஒரு மத நம்பிக்கையும் புண்படுத்த கூடாது என்பதை சரியாக புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ., த.மு.மு.க., போன்ற அமைப்புகள் மத நம்பிக்கையையும், இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போலவும் பேசுகிறார்கள். இது இஸ்லாமிய – இந்து மக்களுக்கு இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தும். வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக கூட்டணிக்கு பயந்து, அடிபணிந்து இந்த குறிப்பிட்ட இயக்க தலைவர்கள் வளம்பெற மட்டுமே இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகிறார்கள் ” என்றார்.