‘மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு’ விரையும் முக்கிய ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ் அதிகாரிகள்!

 

‘மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு’ விரையும் முக்கிய ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ் அதிகாரிகள்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. தற்போதைய நிலவரத்தின்படி திமுக 156 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே ஸ்டாலினுக்கு வாழ்த்து மழை பொழிகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் முந்தியடித்துக்கொண்டு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

‘மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு’ விரையும் முக்கிய ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ் அதிகாரிகள்!

ஸ்டாலினின் வெற்றியை கொண்டாட காத்துக்கிடந்த தொண்டர்கள், சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #மு.கஸ்டாலின்எனும்நான் ஹேஷ்டேகும் #dmkwinsTN என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. பேரானந்தத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

‘உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்’ என்று அவர் உறுதியளித்திருக்கிறார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு முக்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகள் விரைகின்றனர். ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அவர்கள் செல்வதாக தெரிகிறது.