“மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்” : மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

 

“மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்” : மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்” : மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன் என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை மிரட்டல் கடிதம் தொடர்பான விசாரணையில் இறங்கினர்.

“மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்” : மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

விசாரணையில் சென்னை கே.கே.நகர் 10-வது செக்டாரில் இருந்து பிரவீன்குமார் என்பவர் மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. அத்துடன் கடிதத்தில் உள்ள செல்போன் எண்ணை போலீசார் தொடர்புகொண்ட போது, பிரவீன்குமார் என்று பெயரை மட்டும் சொல்லிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செல்போன் சிக்னலை வைத்து மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.