பட்டையை கிளப்பிவிடுவேன் – மேடையில் எச்சரித்த துரைமுருகன்

 

பட்டையை கிளப்பிவிடுவேன் – மேடையில் எச்சரித்த துரைமுருகன்

பட்டையை கிளப்பி விடுவேன் என்று மேடையில் எச்சரிக்கை விடுத்தார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

பட்டையை கிளப்பிவிடுவேன் – மேடையில் எச்சரித்த துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ்நாட்டில் கொரோனா வராத ஆட்கள் மிக குறைவு. எனக்கு கூட கொரோனா வந்தது. தேர்தலுக்கு முன்பே நான் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதால் என் உயிருக்கு ஆபத்து இல்லை. இதையும் தாண்டி மூன்றாவது அறை வருவதாக சொல்கிறார்கள். அது எப்படி இருக்கும் என்று எதெரியாது என்றவர்,

பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. நான் அந்த மருத்துவர்களுக்கு சொல்கிறேன்.. முறையாக பணி செய்யுங்கள். இல்லையென்றால் பட்டையை கிளப்பி விடுவேன். இடமாற்றம் செய்ய மாட்டேன் பணிநீக்கம் செய்து விடுவேன் என்று எச்சரித்தார்.

புகார் என்றால் மக்கள் தொலைபேசியில் என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு கூறுங்கள் என்றார் அதிரடியாக.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், மக்களுக்கு யாதி வராமல் தடுப்பதற்காக அரசாங்கம் வைத்தியம் செய்கிறது. ஆனால் நோய் வருபவர்களை தேடி மருத்துவர்கள் செல்வது தான் திமுக ஆட்சி. ‘ மக்களை தேடி மருத்துவம் ’என்ற புதிய தத்துவத்தை முதல்வர் உருவாக்கியிருக்கிறார் என்றார்.