ஓ.பி.எஸ் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்! – தமிழிசை ட்வீட்

 

ஓ.பி.எஸ் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்! – தமிழிசை ட்வீட்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என்று தெலங்கான ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. வழக்கமான பரிசோதனைக்காக அவர் வந்துள்ளார், பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்று ஓ.பி.எஸ் தரப்பில் கூறப்பட்டது. அதற்குள்ளாக பன்னீர்செல்வத்தின் உடல்நலம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன் மூலம் விசாரித்ததாக கூறப்பட்டது.

ஓ.பி.எஸ் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்! – தமிழிசை ட்வீட்
இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தேன். தமிழக துணை முதல்வர் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.