அநீதிக்கு தலை வணங்க மாட்டேன் – எம்.பி ராகுல் காந்தி

 

அநீதிக்கு தலை வணங்க மாட்டேன் – எம்.பி ராகுல் காந்தி

உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அநீதிக்கு தலை வணங்க மாட்டேன் – எம்.பி ராகுல் காந்தி


மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில். “உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்.யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையுடன் வெல்வேன் . பொய்யை எதிர்க்கும்போது எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார். 

இதனிடையே ஹத்ராஸ் வன்கொடுமையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, ராகுல் காந்தி, பிரியங்கா சென்றனர் .ஆனால் போலீசார் அவர்களை தடுத்ததுடன், ராகுல் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார் . அத்துடன் உபி காவல்துறையால் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.