“ஜாலிக்கு நீ ,தாலிக்கு அவன்” -ஏமாற்றிய காதலிக்கு காதலன் கொடுத்த அதிர்ச்சி..

 

“ஜாலிக்கு நீ  ,தாலிக்கு அவன்”  -ஏமாற்றிய காதலிக்கு காதலன் கொடுத்த  அதிர்ச்சி..

பத்து வருஷம் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொருவரை கல்யாணம் செய்து கொண்ட தன்னுடைய காதலியை துப்பாக்கியால் சுடப்போன காதலனை போலீசார் கைது செய்தார்கள்.

“ஜாலிக்கு நீ  ,தாலிக்கு அவன்”  -ஏமாற்றிய காதலிக்கு காதலன் கொடுத்த  அதிர்ச்சி..

தென் கிழக்கு டெல்லியில் ஆலி விஹாரில் உள்ள தாரம்பால் காலனியில் வசிக்கும் 24 வயதான ஒரு பெண்ணும் 27 வயதான சுமித் தோமர் என்று நபரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் .இந்நிலையில் அந்த பெண் திடீரென வேறொருவரை கல்யாணம் செய்து கொண்டார் .இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவரின் காதலன் தோமர் அந்த பெண்ணை பழி வாங்க ஒரு சந்தர்ப்பத்துக்கு காத்துக்கொண்டிருந்தார் .
அதன் படி கடந்த ஞாயிறுக்கிழமை அன்று அவருக்கு ஒரு துப்பாக்கியொன்று கிடைத்துள்ளது .அந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு தோமர் அந்த முன்னால் காதலியின் வீட்டிற்கு சென்றார் .பிறகு அவரின் வீட்டிற்கு சென்று கதவு தட்டினார் .அப்போது அந்த வீட்டிற்குள்ளிருந்து அந்த தோமரின் முன்னாள் காதலி வெளியே வந்தார் .உடனே தோமர் தன்னுடைய துப்பக்கியை எடுத்து அந்த பெண்ணின் நெற்றியில் சுடுவது போல வைத்து கொண்டு தன்னை ஏமாற்றிய அவரையும் அவரின் குடும்பத்தையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டியுள்ளார் .அவர் அப்படி சண்டை போட்டுக்கொண்டிருக்கும் போது அவரின் பெற்றோர்கள் அங்கு வந்து போலிஸுக்கு போவேன் என்று மிரட்டியதும் அவர் சுடாமல் ஓடி விட்டார் .ஆனால் இன்னொரு நாள் உங்களையெல்லாம் எல்லாம் சுட்டு விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார் .
இதனால் பயந்து போன அந்த பெண்ணும் அவரின் குடும்பத்தினரும் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிந்து தோமரை கைது செய்தனர்.

“ஜாலிக்கு நீ  ,தாலிக்கு அவன்”  -ஏமாற்றிய காதலிக்கு காதலன் கொடுத்த  அதிர்ச்சி..