தமிழகத்தில் எல்.முருகன் தலைமையில் தேசிய உணர்வையூட்டுவேன்! – அண்ணாமலை பேட்டி

 

தமிழகத்தில் எல்.முருகன் தலைமையில் தேசிய உணர்வையூட்டுவேன்! – அண்ணாமலை பேட்டி


எல்.முருகன் தலைமையின் கீழ் செயல்பட்டு தமிழகத்தில் தேசிய உணர்வையூட்டுவேன் என்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எல்.முருகன் தலைமையில் தேசிய உணர்வையூட்டுவேன்! – அண்ணாமலை பேட்டி


விருப்ப ஓய்வு பெற்ற கர்நாடக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நட்டா முன்னிலையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய செயலாளர் முரளிதர்ராவ் முன்னிலையில் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “பதவியை எதிர்பார்த்து பா.ஜ.க-வில் இணையவில்லை. சாதாரணத் தொண்டனாகவே வந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்வேன். உண்மையான வீரனாக, மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையின் கீழ் தமிழகத்தில் தேசிய உணர்வையூட்டும் வகையில் பணியாற்றுவேன்.

தமிழகத்தில் எல்.முருகன் தலைமையில் தேசிய உணர்வையூட்டுவேன்! – அண்ணாமலை பேட்டி


பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான். ஊழல் இன்றி, தேச பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியுடன் நாட்டை வழிநடத்தி வருகிறார். என்னுடைய பங்களிப்பைக் கட்சிக்கு வழங்குவேன்” என்றார்.