“என் கார் வேணும் ,காசு வேணும், நான் வேணாமா ?” …காதலி காசில் டாக்டருக்கு படித்தார் -கல்யாணம்னு சொன்னதும் கம்பி நீட்டினார் ..

 

“என் கார் வேணும் ,காசு வேணும், நான் வேணாமா ?” …காதலி காசில் டாக்டருக்கு படித்தார் -கல்யாணம்னு சொன்னதும் கம்பி நீட்டினார் ..

தனது காதலியின் பணத்திலேயே டாக்டருக்கு படித்து முடித்த ஒரு டாக்டர், அந்த காதலியை கட்டிக்க மறுத்ததால் அவர் மீது அந்த காதலி பாலியல் புகாரளித்துள்ளது புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மால்வாணியில் வசிக்கும் ஒரு 26 வயது மருத்துவர் ,கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணரான ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக கூறி காதலித்து வந்தார் .அவர் புனேவில் உள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படிக்க சேர்ந்த நாள் முதலே அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்தார் .அது மட்டுமல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் பலமுறை உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர் .தன்னை இவர் டாக்டர் படிப்பு முடித்ததும் கல்யாணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் உறவுக்கு அந்த பெண் சம்மதித்துள்ளார் .

“என் கார் வேணும் ,காசு வேணும், நான் வேணாமா ?” …காதலி காசில் டாக்டருக்கு படித்தார் -கல்யாணம்னு சொன்னதும் கம்பி நீட்டினார் ..

மேலும் அந்த டாக்டர் பெரும்பாலும் அந்த பெண்ணின் பணத்திலேயே படித்துள்ளார் .அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணின் கார் மற்றும் ஐ போன் போன்றவற்றையும் அவர் உபயோகப்படுத்தியுள்ளார் .அவர் கேட்கும்போதெல்லாம் இவர் பணத்தை தன் காதலனுக்கு வாரி வழங்கியுள்ளார் .ஆனால் டாக்டர் படிப்பு முடித்ததும் அந்த காதலன் இவரை கழட்டி விட திட்டம் தீட்டினார் .இதனால் மால்வாணியிலிருந்து புனே நகருக்கு வேலைக்கு போனார் .அவர் போன் செய்தாலும் எடுப்பதில்லை .இதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் மால்வாணி போலீசில் அந்த டாக்டர் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் அந்த டாக்டர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

 

“என் கார் வேணும் ,காசு வேணும், நான் வேணாமா ?” …காதலி காசில் டாக்டருக்கு படித்தார் -கல்யாணம்னு சொன்னதும் கம்பி நீட்டினார் ..