“பிழைத்து போகட்டும் என்று ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு போட்டேன்” : அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு!

 

“பிழைத்து போகட்டும் என்று ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு  போட்டேன்” : அதிமுக முன்னாள் அமைச்சர்  பேச்சு!

பிழைத்த போகட்டும் என்று ரம்யா பாண்டியனுக்கு நான் ஓட்டு போட்டேன் என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

“பிழைத்து போகட்டும் என்று ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு  போட்டேன்” : அதிமுக முன்னாள் அமைச்சர்  பேச்சு!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.

“பிழைத்து போகட்டும் என்று ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு  போட்டேன்” : அதிமுக முன்னாள் அமைச்சர்  பேச்சு!

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைகைச்செல்வன் , “வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டிடிவி தினகரன். இது உலக அரசியல் வரலாற்றிலேயே நடக்காத ஒன்று . நடிகர் ரஜினிகாந்த் வாடகை பாக்கி வைத்திருந்தார்; கடைசியில் என்னிடம் வாடகை கேட்காதீர்கள், நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டு சென்று விட்டார். பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல் ஹாசனுக்கு கிடைக்காது. நான் ரம்யா பாண்டியனுக்கு 5 ஓட்டுகள் போட்டுள்ளேன். அவர் நல்ல பெண்ணாக தெரிந்ததால் பிழைத்து போகட்டும் என்று ஓட்டு போட்டேன். 3 கோடி, 4 கோடி ஓட்டுகள் விழ, பிக் பாஸ் போட்டி ஒன்றும் சட்டமன்ற தேர்தல் இல்லை” என்றார்.