‘தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்!’ – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

‘தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்!’ – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழகத்திலும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய நிபந்தனை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்!’ – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு, “தமிழுக்குத் தனியொரு விதி” உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “தமிழ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு “தமிழ் பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்”, “வாரத்தில் இரண்டு மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும்”, “ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்தி விட வேண்டும்” போன்ற நிபந்தனைகள் விதித்து தமிழின் மீது வெறுப்பைக் காட்டியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. மத்திய அரசு நினைப்பது, ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கும்- தமிழ்மொழிக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். சமஸ்கிருதத்தை, தமிழகத்தில் முடிந்த இடங்களில் எல்லாம் புகுத்தி விடத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு- தமிழ் மொழியை மட்டும் இவ்வாறு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

‘தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்!’ – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“இந்தியை- சமஸ்கிருதத்தைத் தமிழ்நாடு உள்ளிட்ட “இந்தி பேசாத மாநிலங்கள் மீது” திணிக்க மேற்கொண்ட பகட்டு அறிவிப்பான பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையின் பச்சோந்தித்தனம், இப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து மட்டுமே தாய்மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்பதில் உறுதியாகி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கே இந்தப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுவிக்கப்பட மாட்டாது என்பதிலிருந்து, தமிழ் மீது பாசமாக இருப்பது போல் போட்ட பா.ஜ.க.வின் வேஷம் கலைந்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

‘தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்!’ – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஆகவே தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழை முதலிடத்தில் வைக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்! மீண்டும் ஒரு போராட்டக் களத்திற்குத் தமிழகத்தைத் தள்ளிவிட வேண்டாம்! ” என்று வலியுறுத்தியுள்ளார்.