வெங்கய்யா நாயுடு குணமடைய முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை!
Sep 30, 2020, 09:23 IST1601437996000
துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு குணமடைய தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான உடல் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. இதனால் அவரை மருத்துவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பினால் வீட்டில் தனிமையில் உள்ள துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
வெங்கய்யாவின் நாயுடு மனைவி உஷா நாயுடுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.