தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களின் முதல் பக்கத்தில் கருணாநிதி பெயர் இடம்பெறும்- ஐ.லியோனி

 

தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களின் முதல் பக்கத்தில் கருணாநிதி பெயர் இடம்பெறும்- ஐ.லியோனி

அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிமையாகவும், இனிமையாகவும் படிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும் என திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களின் முதல் பக்கத்தில் கருணாநிதி பெயர் இடம்பெறும்- ஐ.லியோனி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற எனக்கு தற்போது பாடநூல் கழகத்தில் ஒரு மிகப்பெரிய பொறுப்பை முதல்வர் வழங்கியிருக்கிறார். மாணவர்கள் பாடநூலினை விரும்பி மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாணவர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு பாடநூலினை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பாடநூல் கழகம் முயற்சி செய்யும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இலக்கியப் பணிகள் குறித்தும், கல்விக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்தும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி பெற அவர் எடுத்த முயற்சிகள் குறித்தும் வருங்காலத் தலைமுறையினர் பாடநூல் வழியாக தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அரசுத்துறையில் முதலமைச்சரின் தேர்வுகள் அனைத்தும் சரியாக உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, கல்விக்காக செய்த சாதனைகளை வருங்கால தலைமுறையினர் பாடநூல் வழியாக தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடநூல் கழகத்தில் புத்தகங்களில் மாணவர்கள் பயிலும் பாடங்களை அச்சடிப்பது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வாழ்க்கை கல்வி முறையினையும் தேர்வுக்குத் தயாராகும் முறையினையும் திறன் வளர்ப்பு முறையினையும் கற்றுக் கொள்ளும்வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும்

தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களின் முதல் பக்கத்தில் கருணாநிதி பெயர் இடம்பெறும்- ஐ.லியோனி

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களின் முதல் பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது இது அரசியலுக்காக செய்யப்பட்டது. ஆனால் தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி கல்விக்காக செய்த சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் அவரது பெயர் மறுபடியும் சேர்க்கப்படும்” என தெரிவித்தார்.