“திமுக உடைந்துவிட்டதாக அழகிரி சொன்னதன் அர்த்தம் போகப்போக தெரியும்” : அமைச்சர் பாண்டியராஜன்

 

“திமுக உடைந்துவிட்டதாக அழகிரி சொன்னதன் அர்த்தம்  போகப்போக தெரியும்” : அமைச்சர் பாண்டியராஜன்

மு.க.அழகிரியின் நிலைப்பாடு என்ன என்பது போகப் போகத் தெரியும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

“திமுக உடைந்துவிட்டதாக அழகிரி சொன்னதன் அர்த்தம்  போகப்போக தெரியும்” : அமைச்சர் பாண்டியராஜன்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் விநியோகம் இன்று முதல் தொடங்கியது. திருவேற்காடு நகராட்சி உட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கினார்.

“திமுக உடைந்துவிட்டதாக அழகிரி சொன்னதன் அர்த்தம்  போகப்போக தெரியும்” : அமைச்சர் பாண்டியராஜன்

இந்நிலையில் திருவேற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக உடைந்துவிட்டதாக மதுரையில் அழகிரி பேசியுள்ளார். இதன் விளைவு போகப்போக தெரியும். மு.க. அழகிரி நிலைப்பாடு என்ன என்பது போகப் போகத் தெரியும். அதிமுக அரசை குறை சொல்லி ஸ்டாலின் பரப்புரை செய்து வந்தால் அவருக்கு கிடைக்கும் சொற்ப வாக்குகளும் பறிபோய்விடும். அணுமின் நிலைய தேர்வு மையத்தை மும்பையில் வைத்தது குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் பிரதமருக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்து வருவது போல தமிழகத்தில் தேர்வு மையம் அமைய முயற்சி எடுப்போம்”என்றார்.