“மக்களால் நேரடியாக முதல்வரானேன்” – முதல்வர் பழனிசாமி

 

“மக்களால் நேரடியாக முதல்வரானேன்” – முதல்வர் பழனிசாமி

பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“மக்களால் நேரடியாக முதல்வரானேன்” – முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், நான் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். நான் எம்எல்ஏவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தானே! என ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின்,ஆட்சியில் இருந்தபோது ஏன் எதுவும் செய்யவில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அதை ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“மக்களால் நேரடியாக முதல்வரானேன்” – முதல்வர் பழனிசாமி

முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் யானைக்கு வாழைப்பழம், தர்பூசணியை முதல்வர் உணவாக கொடுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் சார்பில் ராமானுஜர் படம் வழங்கப்பட்டது. அவருடன் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்