“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” : ராகுல் காந்தி பேச்சு!

 

“நான் தமிழன் இல்லை; ஆனால்  தமிழை மதிக்கிறேன்” : ராகுல் காந்தி பேச்சு!

தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது என்று எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“நான் தமிழன் இல்லை; ஆனால்  தமிழை மதிக்கிறேன்” : ராகுல் காந்தி பேச்சு!

இந்நிலையில் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “அனைவருக்கும் வணக்கம்” என் தமிழில் பேசி பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்க வந்துள்ளேன்.நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை. தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது. தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.

“நான் தமிழன் இல்லை; ஆனால்  தமிழை மதிக்கிறேன்” : ராகுல் காந்தி பேச்சு!

தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு. நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும்.இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது” என்றார்.