‘’என் உடல்நிலை நன்றாக இருக்கிறது..’’ அமித்ஷா

 

‘’என் உடல்நிலை நன்றாக இருக்கிறது..’’ அமித்ஷா

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’ என் உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஆனாலும், நான் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன்.  ஆகவே, கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.  சாமானியர்கள் முதல் அதிகாரம் படைத்தவர்கள் வரை அனைவரையும் விட்டுவைக்கவில்லை கொரோனா தொற்று. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி, கொரோனா மீதான அச்சத்தை மக்களிடையே அதிகப்படுத்துகிறது.