’’நான் நலமாக இருக்கிறேன்!’’-ப.சிதம்பரம்

 

’’நான் நலமாக இருக்கிறேன்!’’-ப.சிதம்பரம்

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னை வீட்டில் தனிமைப் படு்த்திகொண்டிருகிறார்.

அது குறித்து அவரே, கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், வீட்டில் தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்புக்கொண்டர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’என்று டுவிட்டரில் தெரிவி்த்திருந்தார்

இதனால், கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரத்திற்கு என்ன ஆயிற்று? அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று பலரும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையத்து ப.சிதம்பரம், ’’கார்த்தி சிதம்பரம் MP கரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி’’என்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.