51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற, 26 வயது கணவர் கைது

 

51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற,  26 வயது கணவர் கைது

கன்னியாகுமரி

திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் 51 வயது காதல் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற 26 வயது இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளை அருகே கரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சாக(51). இவர் கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருணம் செய்து கொண்டு, வாழ்ந்து வந்துள்ளனர்.

51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற,  26 வயது கணவர் கைது

இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பது குறித்து, அருண் அவமானத்திற்கு உள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாக தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண் அவர் தூங்கும்போது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து கேரள மாநிலம் வெள்ளறடை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அருணை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த பெண்ணை, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம், தமிழக -கேரளா எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.