“குழந்தையும் பொறக்கல ,வரதட்சணையும் பத்தலை”-குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்த பெண்..

 

“குழந்தையும் பொறக்கல ,வரதட்சணையும் பத்தலை”-குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்த பெண்..

ஒரு மணமான பெண்ணை புகுந்த வீட்டிலுள்ள அனைவரும் வரதட்சணை கொடுமையோடு ,குழந்தை இல்லாததால் செய்த கொடுமையாலும் மனமுடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது .

“குழந்தையும் பொறக்கல ,வரதட்சணையும் பத்தலை”-குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்த பெண்..ஹைதராபாத்தில் லாவண்யா லஹரி என்ற பெண்ணும் வெங்கடேஸ்வரா ராவ் என்ற பைலட்டும் மாமனார் ,மச்சினருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் .திருமணமாகி பல வருடங்களாக அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லை .அதனால் கணவர் வெங்கடேஷ்வரராவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார் .இந்நிலையில் லாவண்யாவை அவரின் புகுந்த வீட்டிலுள்ள மாமனார் ,மைத்துனர் போன்ற அனைவரும் வரதட்சணை கொடுமையும் ,மேலும் குழந்தை இல்லாததால் வார்த்தைகளால் திட்டி கொடுமை செய்துள்ளார்கள்.

“குழந்தையும் பொறக்கல ,வரதட்சணையும் பத்தலை”-குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்த பெண்..இதனால் மனமுடைந்த லாவண்யா சோசியல் மீடியாவில் குடும்பத்தினர் செய்த கொடுமைகளை வெளியிட்டுவிட்டு ,ஜூன் 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார் .இதனால் போலீசில் லாவண்யாவின் குடும்பத்தினர் புகாரளித்ததால் ,போலீசார் அவரின் புகுந்த வீட்டிலுள்ள அனைவர் மீதும் வரதட்சணை வழக்கு பதிவு செய்து , கணவரை கைது செய்தனர் .மாமனாரையும் ,மைத்துனரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.