மும்பை கனவை நிஜமாக்க! ரூ.45 ஆயிரத்துக்கு 2 மாத குழந்தையை விற்க முயன்ற தாய்.. கைது செய்த போலீஸ்

 

மும்பை கனவை நிஜமாக்க! ரூ.45 ஆயிரத்துக்கு 2 மாத குழந்தையை விற்க முயன்ற தாய்.. கைது செய்த போலீஸ்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மும்பை செல்லும் கனவை நிஜமாக்க 2 மாத குழந்தையை விற்க முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹபீப்நகர் காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஷேக் சோயா கான். 22 வயதான ஷேக் சோயா கானுக்கு திருமணமாகி விட்டது. கணவர் அப்துல் முஜாஹித்துடன் ஏற்பட்ட சின்ன சண்டையில் கோபித்து கொண்டு தனது 2 மாத குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.மும்பை கனவை நிஜமாக்க! ரூ.45 ஆயிரத்துக்கு 2 மாத குழந்தையை விற்க முயன்ற தாய்.. கைது செய்த போலீஸ்

மும்பை செல்ல வேண்டும் என்பது ஷேக் சோயா கானின் நீண்ட நாள் ஆசை மற்றும் கனவாகும். தற்போது கணவரை விட்டு பிரிந்து தனியாக இருப்பதால் அவருக்கு குழந்தையை வளர்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது. மேலும் மும்பை செல்ல வேண்டும் ஆசையும் அதிகரித்ததால் தனது 2 மாத குழந்தை ஷேக் அட்னானை ரூ.45 ஆயிரத்துக்கு விற்க முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தெரிந்தவுடன் குழந்தையின் தந்தை அப்துல் முஜாஹித் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மும்பை கனவை நிஜமாக்க! ரூ.45 ஆயிரத்துக்கு 2 மாத குழந்தையை விற்க முயன்ற தாய்.. கைது செய்த போலீஸ்

உடனே களத்தில் இறங்கிய போலீசார், 2 மாத குழந்தையை விற்க முயன்ற ஷேக் சோயா கான், குழந்தையை வாங்க முயன்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தரகர் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது சிறார் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். புகார் கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் குழந்தையை மீட்டதுடன் குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.