“மக்களுக்கு எது வேண்டும் என்பதை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” : நடிகை குஷ்பூ ட்வீட் !

 

“மக்களுக்கு எது வேண்டும் என்பதை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” : நடிகை குஷ்பூ ட்வீட் !

பாஜக மீதும் , பிரதமர் மோடி மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு எது வேண்டும் என்பதை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” : நடிகை குஷ்பூ ட்வீட் !

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் கடந்த 1 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 150 இடங்களில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டீரிய சமிதி 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

30க்கும் மேற்பட்ட இடங்களில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஒவைசி கட்சியும் , ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் , “தென்னிந்தியாவில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது ஹைதராபாத் தேர்தல் வெற்றிக்கு ஒரு சான்று. தமிழ்நாடும் வெகு தொலைவில் இல்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 2021 தேர்தலிலும் பெரிய வெற்றியை பெறுவோம்” என்றும் தனது மற்றொரு பதிவில், ” மக்களுக்கு எது வேண்டும் என்பதே ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. பாஜக மீதும், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.