கள்ளக்காதல்… அடிக்கடி சண்டை… பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரகசியம்!- மனைவியை அழைத்து வந்து குத்திக் கொன்ற கணவன்

 

கள்ளக்காதல்… அடிக்கடி சண்டை… பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரகசியம்!- மனைவியை அழைத்து வந்து குத்திக் கொன்ற கணவன்

கள்ளக்காதலால் அடிக்கடி சண்டைப் போட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்ற மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை மகாகவி பாரதி நகர் 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (32). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி பவித்ரா என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து சார்லஸ் ராஜ்குமார்  வியாசர்பாடி சுந்தரம் ஆறாவது தெருவைச் சேர்ந்த ரமணி (35) என்ற பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன நாள் முதல் இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரமணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார். சார்லஸ் ராஜ்குமார் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ரமணி  மீண்டும் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று மாலை ரமணியை  தனது வீட்டுக்கு அழைத்து வந்த சார்லஸ் ராஜ்குமார், தனது அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் ரமணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

கள்ளக்காதல்… அடிக்கடி சண்டை… பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரகசியம்!- மனைவியை அழைத்து வந்து குத்திக் கொன்ற கணவன்

அக்கம்பக்கத்தினர் ரமணியின் அலறல் சத்தம் கேட்டு எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த எம்கேபி நகர் காவல்துறையினர், ரமணியின் உடல் அருகே அமர்ந்திருந்த சார்லஸ் ராஜகுமாரை கைது செய்தனர். மேலும் ரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ரமணிக்கு வியாசர்பாடி பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ் ராஜ்குமார் மனைவியை தீர்த்துக் கட்டியதாகவும் தெரியவந்துள்ளது தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.