சிறைக்கு சென்ற கணவன்… ரவுடியுடன் மனைவி கள்ளக்காதல்… வெளியே வந்த நண்பர் வெறிச் செயல்

 

சிறைக்கு சென்ற கணவன்… ரவுடியுடன் மனைவி கள்ளக்காதல்… வெளியே வந்த நண்பர் வெறிச் செயல்

கணவன் சிறைக்கு சென்ற நேரத்தில் ரவுடியுடன் மனைவி ஓட்டம் பிடித்தார். வெளியே வந்த கணவர், ரவுடியின் தந்தையை படுகொலை செய்தார். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஆர்.வி. நகர் 6-வது தெருவில் குடியிருப்பவர் புண்ணியகோட்டி (65). இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் ஆதிலட்சுமி. ஆதிலட்சுமியின் கணவர் தினேஷ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபல ரவுடி சி.டி.மணியின் கூட்டாளி தினேஷ். இவரது நண்பர் கணேஷ். குற்ற வழக்கில் கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கணேஷ் சிறைக்குச் சென்ற பிறகு தினேஷ் அடிக்கடி அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கணேஷின் மனைவி சபிதா (21) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சபிதாவை அழைத்துக் கொண்டு தனியாக வீடு எடுத்து தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்தார் தினேஷ். வேளச்சேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் செயின் பறிப்பில் சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷை காவல்துறையினர் கைதுசெய்து சிறை அடைத்தனர்.

இந்தச் சமயத்தில் சிறைக்கு சென்ற கணேஷ் வெளியே வந்துள்ளார். வீட்டில் மனைவி சபிதா இல்லை. அவரை தேடியபோது தினேஷிடன் அவர் வாழ்வது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ், நேற்று தினேஷ் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த புண்ணியகோட்டியிடம் கணேஷ் தகராறு செய்துள்ளார். அப்போது புண்ணியகோட்டியை கத்தியால் குத்திக்கொலை செய்தார் கணேஷ். இதுகுறித்து குமரன் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணேஷை தேடிவருகின்றனர்

மருமகனுக்கு பதில் மாமனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.