‘கள்ளக்காதலனை திட்டமிட்டு கொன்ற கணவன்’ : மனமுடைந்து மனைவி தற்கொலை!

 

‘கள்ளக்காதலனை திட்டமிட்டு கொன்ற கணவன்’ : மனமுடைந்து மனைவி தற்கொலை!

காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலன் கணவர் கொன்ற சோகம் தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் காரை பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகள் காமாட்சி (32). இவருக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ரவிசந்திரனுடன் திருமணமான நிலையில், ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். காமாட்சியின் தம்பி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்து விட்டதால், மணியின் நண்பர் தினேஷை சங்கர் தனது மகன் போல வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தினேஷுக்கு காமாட்சிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

‘கள்ளக்காதலனை திட்டமிட்டு கொன்ற கணவன்’ : மனமுடைந்து மனைவி தற்கொலை!

இதனையறிந்த ரவிசந்திரன் காமாட்சியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், அதனை கேட்காமல் காமாட்சி தினேஷுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஆத்திரமடைந்த ரவிசந்திரன் திட்டமிட்டு தினேஷை வீட்டுக்கு வரவழைத்து கட்டையால் அடித்துக் கொலை செய்து, மோட்டூர் ஏரியில் 10 அடி குழி தோண்டி புதைத்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிச்சந்திரன் மற்றும் சங்கர் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

‘கள்ளக்காதலனை திட்டமிட்டு கொன்ற கணவன்’ : மனமுடைந்து மனைவி தற்கொலை!

இந்த நிலையில், தினேஷ் உயிரிழந்ததை அறிந்து மனமுடைந்த காமாட்சி நேற்று அதிகாலை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், காமாட்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இச்சம்பவம் வழக்கு பதிந்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.