மனைவியுடன் கள்ளத்தொடர்பு… தோல் தொழிற்சாலை ஊழியரை வெட்டிக் கொன்ற கணவர்!

 

மனைவியுடன் கள்ளத்தொடர்பு… தோல் தொழிற்சாலை ஊழியரை வெட்டிக் கொன்ற கணவர்!

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தோல் தொழிற்சாலை ஊழியரை, கணவர் வீடு புகுந்து வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பாலூரை சேர்ந்தவர் டில்லிபாபு (35). கட்டி மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர் கோவிந்தசாமி என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனை அறிந்த டில்லி பாபு, லட்சுமியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு… தோல் தொழிற்சாலை ஊழியரை வெட்டிக் கொன்ற கணவர்!

இதனால் லட்சுமி, கணவரிடம் கோபித்துகொண்டு கடந்த 6 மாதங்களாக ஆம்பூர் ஆலாங்குப்பத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். எனினும், கோவிந்தசாமி லட்சுமியுடன் கள்ள தொடர்பை கைவிடாமல், அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டில்லிபாபு, நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கந்தசாமியின் வீட்டிற்கு புகுந்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் காலில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கந்தசாமியை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் உமாராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து உமாராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை டில்லிபாபு ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலை சம்பவம் குறித்து அவரிடம் உமராபாத் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.