6 பிள்ளைகள் இருக்கின்றன… 25 ஆண்டுகள் பிரியாத தம்பதி… மனைவி இறந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

 

6 பிள்ளைகள் இருக்கின்றன… 25 ஆண்டுகள் பிரியாத தம்பதி… மனைவி இறந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

6 பிள்ளைகள் இருந்தும் மனைவி இறந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் குமார் (50)- பத்மா (வயது45) தம்பதி. இந்த தம்பதிக்கு ஐந்து மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த தம்பதிக்கு 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் குமாரின் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்மையில் பத்மா உயிரிழந்தார். திருமணம் முடிந்த 25 ஆண்டுகளாக இணை பிரியாமல் இந்த தம்பதி இருந்து வந்துள்ளது. ஒரே ஒரு மகனுக்கு திருமணமாகியுள்ள நிலையில், மனைவி இறந்த சோகத்தில் குமார் இருந்து வந்துள்ளார்.

மேலும், எனது மனைவி இல்லாத இந்த உலகத்தில் என வாழபிடிக்கவில்லை. என் மனைவி போன இடத்துக்கு சென்று விடுகிறேன்” என்று குமார் தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இதனால் குமாரை ஆறுதல்படுத்தியுள்ளனர் உறவினர்கள். ஆனாலும் மனைவி நினைப்பிலேயே இருந்துள்ளார் குமார். இதனிடையே, வீட்டில் தனியாக இருந்த குமார், விஷம் குடித்துள்ளார். வீட்டிற்கு மகன்கள், தந்தை வாயிலில் இருந்து நுரைதள்ளியபடி கிடந்துள்ளார். உடனடியாக அவரை சீர்காழி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து வந்த திருவெண்காடு காவல்துறையினர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகன்கள், மகள் இருந்த நிலையில் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.