“இன்னைக்கு அசைவம் வேணாம் “-தடுத்த கணவருக்கு நேர்ந்த நிலை

 

“இன்னைக்கு அசைவம் வேணாம் “-தடுத்த கணவருக்கு நேர்ந்த நிலை

மீன்குழம்பு வைத்ததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை தாக்கி விட்டு, பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார்.


,

“இன்னைக்கு அசைவம் வேணாம் “-தடுத்த கணவருக்கு நேர்ந்த நிலை


தமிழகத்தின் சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் 40 வயதான குமார் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு 37 வயதில் துர்கா என்ற மனைவியும் , மோகன், ஜீவா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். குமார் ஒரு முருக பக்தர் ஆனதால் ,அவர் ஆடி கிருத்திகையன்று அசைவம் சாப்பிட மாட்டார் .ஆனால் அவரின் மனைவி அன்று குழந்தைகளுக்காக மீன் குழம்பு வைத்தார்

இந்நிலையில் அந்த குமார் அன்று இரவு வீட்டுக்கு சாப்பிட வந்த போது ,அவரின் மனைவி வீட்டில் மீன் குழம்பு வைத்திருப்பதை பார்த்து கோபம் கொண்டார் .அதனால் மனைவி துர்காவிடம் இது பற்றி கேட்டு சண்டை போட்டார் .அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் கோபத்தின் உச்சிக்கே சென்று ,அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரின் மனைவி துர்காவை அடித்து விட்டார் .இந்த தாக்குதலில் அவர் மயங்கி விழுந்தார் .அதை பார்த்த குமார் மனைவி இறந்து விட்டதாக நினைத்து ,போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார் .பிறகு அவரின் மனைவி துர்காவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .