கணவரை கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் ஆஜரான மனைவி

 

கணவரை கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் ஆஜரான மனைவி

கமுதி அருகே கணவரை கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கணவரை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில்ஆஜரானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கமுதி அருகே கிளாமரம் கிராமத்தைச் சேர்ந்த அனுமந்த பெருமாள் என்பவர், அவரது மனைவி அம்பிகாவை நாள்தோறும் மதுஅருந்திவிட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவரை கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் ஆஜரான மனைவி

இதையடுத்து ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி அம்பிகா, கணவர் அனுமந்த பெருமாளை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் கமுதி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து அம்பிகாவுடன் அவரது வீட்டுக்கு சென்றா சென்ற கமுதி போலீசார் பெருமாளின் உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.