‘மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலன்’ : கணவன் வெறிச்செயல்!

 

‘மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலன்’ : கணவன் வெறிச்செயல்!

கோவை அருகே கள்ளத் தொடர்பு வைத்திருந்த மனைவியை கணவன் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

‘மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலன்’ : கணவன் வெறிச்செயல்!

கோவை மாவட்டம் காரமடை அருகே இருக்கும் வெள்ளியங்காடு பகுதியில் வசித்து வந்த தம்பதி தர்மன்(62)- கவிதா(40). தர்மன் தனது வீட்டில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கவிதாவுக்கும் அப்பகுதியை சேர்ந்த காளி என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து பேசுவதாக அப்பகுதி மக்கள் தர்மனிடம் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், கவிதா அடிக்கடி அந்த நபரிடம் செல்போனிலும் பேசி கொண்டிருந்துள்ளார்.

‘மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலன்’ : கணவன் வெறிச்செயல்!

இதனை தர்மன் கண்டித்தும், கவிதா காளியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று இரவு தர்மன் வீட்டுக்கு மது வாங்க வந்த காளியிடம் கவிதா பேசிக் கொண்டிருந்துள்ளார். இருவரையும் ஒன்றாக பார்த்த தர்மன், ஆத்திரத்தில் அங்கேயே காளியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்திருக்கிறார். படுகாயம் அடைந்த காளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் தர்மனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.