நான்கு பெண் குழந்தையை பெற்ற மனைவி -ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட கணவர் -என்ன செஞ்சார் பாருங்க ..
மனைவி தொடர்ந்து பெண் குழந்தைகளையே பெற்றதால் கோபமுற்ற கணவன் மற்றும் மாமியார் அந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் சாவித்ரி பாகேல் என்ற 30 வயதான பெண் தனது கணவர் ரத்தன் சிங், அவரது தந்தை கிலோல்ட் சிங் மற்றும் தாய் பெனூ பாய் ஆகியோருடன் டிண்டோலி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் .அந்த பெண்ணுக்கு நான்கு பெண் குழந்தைகள் .மேலும் சமீபத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு மற்றொரு பெண் குழந்தையை அவர் பெற்றார் .
இதனால் அந்த குடும்பத்தினரும் ,அந்தக் கணவரும் ஆண் குழந்தை பிறக்காவில்லையே என்று ஆதங்கப்பட்டனர் .மேலும் இதற்கு அந்த மனைவிதான் காரணம் என்று நினைத்த அவர்கள் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்தனர் .அது மட்டுமல்லாமல் அவரை வரதட்சணை கொடுமையும் செய்து வந்தார்கள் .இப்படி ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் அந்த கணவரும் ,மாமியாரும் சேர்ந்து கடந்த வியாழக்கிழமை அந்த பெண்ணை அடித்து கழுத்தை நெரித்து கொன்று விட்டார்கள் .
பின்னர் இந்தக் கொலை பற்றி இறந்த பெண்ணின் சகோதரர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .