`பிளாட்பாரத்தில் கூடாரம்; இரவில் போதை!- கணவனால் மனைவிக்கு நடந்த கொடுமை

 

`பிளாட்பாரத்தில் கூடாரம்; இரவில் போதை!- கணவனால் மனைவிக்கு நடந்த கொடுமை

சென்னையில் பிளாட்பாரத்தில் வாழ்க்கையை நடத்திய வந்த கணவன்-மனைவிக்கு இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஏற்பட்ட சண்டையில் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

`பிளாட்பாரத்தில் கூடாரம்; இரவில் போதை!- கணவனால் மனைவிக்கு நடந்த கொடுமை

சென்னை வேளச்சேரி அண்ணாநகர் பிளாட்பாரத்தில் சில தினங்களுக்கு முன் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்துக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள். விரைந்து வந்த போலீஸார், மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் . அப்போது திடுக்கிம் தகவல்கள் வெளியாகின.

வேளச்சேரியில் இறந்து கிடந்த பெண்ணின் பெயர் செல்வி. இவர் குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் செல்விக்கும் அதே பிளாட்பாரத்தில் தங்கியிருந்த பரணிதரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அங்கேயே தங்கி, கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இரவில் ஒன்றாக மது அருந்தும் இவர்கள், சம்பவத்தன்று போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த பரணிதரன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து செல்வியைத் தாக்கியதில் தலையில் காயமடைந்து மயங்கி விழுந்து இறந்துவிட்டார். பின்னர் பரணிதரன், அங்கிருந்து தப்பிவிட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.