மது அருந்தியதை கண்டித்த மனைவி, கழுத்தை நெரித்துக் கொலை… கணவர் போலீசில் சரண்…

 

மது அருந்தியதை கண்டித்த மனைவி, கழுத்தை நெரித்துக் கொலை… கணவர் போலீசில் சரண்…

சேலம்

சேலம் அருகே மது அருந்துவதை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞர், போலீசில் சரணடைந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளி குப்பனூரை சேர்ந்தவர் விஜயகுமார் (31). இவரது மனைவி ஈஸ்வரி(29). விஜயகுமார் சேலத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு, வீட்டிற்கு பணம் தர வில்லை என கூறப்படுகிறது.

இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க் கிழமை இரவு விஜயகுமார் மீண்டும் மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து ஈஸ்வரி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, ஈஸ்வரி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளார்.

மது அருந்தியதை கண்டித்த மனைவி, கழுத்தை நெரித்துக் கொலை… கணவர் போலீசில் சரண்…

மதுபோதையில் இருந்த விஜயகுமார், நள்ளிரவில் ஈஸ்வரி அணிந்திருந்த தாலி கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தார். பின்னர், நங்கவள்ளி காவல் நிலையத்திற்கு சென்று, அவர் சரணடைந்தார். விஜயகுமார் அளித்த தகவலின் பேரில், போலீசார் ஈஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைதுசெய்தனர். மதுஅருந்துவதை கண்டித்த மனைவியை, இளைஞர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.