கணவனை தட்டிக்கேட்ட மனைவி வெட்டிக் கொலை!

 

கணவனை தட்டிக்கேட்ட மனைவி வெட்டிக் கொலை!

கடலூர் மாவட்டம், புவனகிரியில் கணவன் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தட்டிக்கேட்ட மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்

கணவனை தட்டிக்கேட்ட மனைவி வெட்டிக் கொலை!

கீழ்புவனகிரியை சேர்ந்தவர் கரிகாலன். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி பச்சையம்மாள். இவருக்கு நீண்ட நாட்களாக கணவன் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்தது. இன்று அதை பச்சையம்மாள் கேட்கப் போய் அவர்களுக்குள் வாய்த்தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த கரிகாலன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் புவனகிரி போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் கரிகாலனைப் பிடிப்பதற்குள் அவர் தலைமறைவானார்.

இறந்த பச்சையம்மாளின் உடலை கைப்பற்றிய போலீசார் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பச்சையம்மாளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது.