4 மாத கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற காதல் கணவன்.. மதுபோதையில் நேர்ந்த விபரீதம்!

 

4 மாத கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற காதல் கணவன்.. மதுபோதையில் நேர்ந்த விபரீதம்!

காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வரும் ஹரி(25) என்ற இளைஞரும் தேவி(21) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், தேவியின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் 7 மாதத்துக்கு முன்னர், வீட்டை விட்டு வெளியேறி தேவி ஹரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த தேவிக்கும் ஹரிக்கும் இடையே அடிக்கடி வந்துள்ளது. ஹரி அடிக்கடி குடித்து விட்டு வருவது தான் சண்டையின் முக்கிய காரணம்.

4 மாத கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற காதல் கணவன்.. மதுபோதையில் நேர்ந்த விபரீதம்!

இதே போல நேற்று முன்தினமும் ஹரி குடித்து விட்டு தேவியிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது தேவி அவரை திட்டியதால் ஆத்திரமடைந்த ஹரி, அருகே இருந்த கடப்பாரையை எடுத்து தேவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஹரியையும் கைது செய்துள்ளனர்.

4 மாத கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற காதல் கணவன்.. மதுபோதையில் நேர்ந்த விபரீதம்!

இது குறித்து பேசிய போலீசார், தேவியின் பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளாததால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கி இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தேவி திருமணம் செய்து கொள்ளும் போது ஹரிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியாது. திருமணத்துக்கு பின்னர் அந்த விஷயம் தெரிய வந்ததால், அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த சண்டை நேற்று முற்றியதால் ஹரி, தேவியை கொலை செய்திருக்கிறார்” என்று கூறியுள்ளனர். 4 மாத கர்ப்பிணியை கடப்பாரையால் அடித்துக் கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.