வயதான காலத்தில் கள்ளக்காதல்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!

 

வயதான காலத்தில் கள்ளக்காதல்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!

நெல்லை தச்சநல்லூர்‌ மணிமுர்த்திஸ்வரம்‌ பகுதியைச்‌ சேர்ந்தவர்‌ பொன்‌இசக்கி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். ‌ இதில்‌ மூத்தமகளுக்கு திருமணமாகிவிட்டது. பொன்‌இசக்கி டீ கடையில் வேலை செய்து வருகிறார்.

வயதான காலத்தில் கள்ளக்காதல்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!

இந்நிலையில்‌ முத்துலட்சுமிக்கு நெல்லை வண்ணார்பேட்டையைச்‌ சேர்ந்த வேறொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பொன்‌இசக்கிக்கும் முத்துலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து பொன்‌இசக்கியின் மற்ற இரண்டு மகள்களும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட நேற்றிரவும் கணவன் -மனைவி இருவருக்கும் இது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை தகராறு முற்றவே , ஆத்திரமடைந்த பொன்‌இசக்கி மனைவி முத்துலட்சுமியை அரிவாளால்‌ சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

வயதான காலத்தில் கள்ளக்காதல்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!

இதை தொடர்ந்து பொன்‌இசக்கி தச்சநல்லூர்‌ காவல்நிலையத்தில்‌ நேரடியாக சென்று சரணடைந்துள்ளார். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்‌ . இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.