மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவன்!

 

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவன்!

கோவையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்லாமல் குடும்பத்தோடு வீட்டிலேயே இருக்கும் சிலர், பெண்கள் மீது தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு கொடுமைபடுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவன்!

அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சோட்டிலால்(40) என்பவர் தனது மனைவி சகுந்தலா (37) என்பவரை வீட்டிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தார். இதில் சோட்டிலாலுக்கு கையில் காயம் ஏற்பட்டதால் அவரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக கோவை ஈச்சனாரி கணேசபுரம் பகுதியில் தங்கி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சோட்டிலால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மனைவியையும் கோவைக்கு அழைத்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போத்தனூர் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.