‘கழுத்தை நெறித்து ,ட்ரம்மில் அடைத்து ,புதரில் திணித்து ..’-முன்னாள் மனைவியை கொடூரமாக கொன்ற முன்னாள் கணவர் .

 

‘கழுத்தை நெறித்து ,ட்ரம்மில் அடைத்து ,புதரில் திணித்து ..’-முன்னாள்  மனைவியை கொடூரமாக கொன்ற முன்னாள்  கணவர் .

ஒரு கணவன் ,தன்னுடைய முன்னாள் மனைவியை கொடுமையான முறையில் கொலை செய்து ,பிணத்தை ஒரு புதருக்குள் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் திகிலை உண்டாக்கியுள்ளது .

நவி மும்பையின் தானே பகுதியில் வசிக்கும் ,அம்புஜ் திவாரி என்பவர் தன்னுடைய முன்னாள் மனைவி நீலம் என்ற பெண்ணை தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் சவுபே என்பவருடன் சேர்ந்து கொண்டு கொலை செய்து மும்பை -புனே நெடுஞ்சாலையில் ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் அடைத்து வீசிவிட்டு சென்றுள்ளனர் .

‘கழுத்தை நெறித்து ,ட்ரம்மில் அடைத்து ,புதரில் திணித்து ..’-முன்னாள்  மனைவியை கொடூரமாக கொன்ற முன்னாள்  கணவர் .
தன்னுடைய தாய் சில நாட்களாக காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவரின் மகன் அம்புஜ் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து ஜூலை 23 ம் தேதி ரபாலே காவல் நிலையத்தில் புகாரளித்த பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
போலீசார் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அவரின் முன்னாள் கணவர் அம்புஜ் திவாரியே அவரின் முன்னாள் மனைவியை, சவுப் என்பவரின் இல்லத்தில் வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.பிறகு அவர்கள் கொடுத்த தகவலால் அந்த பெண்ணின் உடல் கோபோலி அருகே நெடுஞ்சாலையில் உள்ள புதர்களில் இருந்து மீட்கப்பட்டது .
மேலும் அந்த உடலை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது,.இந்த கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘கழுத்தை நெறித்து ,ட்ரம்மில் அடைத்து ,புதரில் திணித்து ..’-முன்னாள்  மனைவியை கொடூரமாக கொன்ற முன்னாள்  கணவர் .
Crime. (File Photo: IANS)