மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

நாகை

நாகூரில் மனைவி இறந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் புயல்மணி (69). இவரது மனைவி லட்சுமி. முதுமை காரணமாக தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்தவர்கள் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறப்பு குறித்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த புயல்மணி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தம்பதியினர் இருவரும் அடுத்தடுத்து 1 மணி நேர இடைவெளியில் உயிரிழந்த நிலையில், நேற்று இருவருக்கும் ஒன்றாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல்கள் தகனம் செய்யப்பட்டன. மனைவியின் இறப்பை அறிந்து கணவரும் அதிர்ச்சியில் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.