“பொம்பளை புள்ளைய தவிர, உன் வயித்துல வேறெதுவும் பொறக்காதா” -கடுப்பான கணவர் என்ன செஞ்சார் பாருங்க

 

“பொம்பளை புள்ளைய தவிர, உன் வயித்துல வேறெதுவும் பொறக்காதா” -கடுப்பான கணவர் என்ன செஞ்சார் பாருங்க

வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை , கத்தியால் அறுத்து கருவை கலைத்த தொழிலாளியை தேடி வருகின்றனர்

“பொம்பளை புள்ளைய தவிர, உன் வயித்துல வேறெதுவும் பொறக்காதா” -கடுப்பான கணவர் என்ன செஞ்சார் பாருங்க

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று உறவினர்களிடம், அரவிந்த் கூறி வந்தார் . இந்த நிலையில் மனைவியின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதை பற்றி அறிய அவரை ஸ்கேன் சென்டருக்கு கணவன் அழைத்து சென்று உள்ளார்.
அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த ஸ்கேன் சென்டரில் அவரின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்ற உண்மையை கூறி விட்டனர் .இதனால் அந்த கண்வர் அதிச்சியடைந்தார் .அதனால் அவர் வீட்டிற்கு மனைவியை அழைத்து வந்ததும் அவரின் கருவை வீட்டிலேயே கலைக்க முடிவெடுத்தார் .அதனால் அவருக்கு தெரிந்த இரண்டு பேரை வீட்டிற்கு கூட்டி வந்தார் .பின்னர் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணின் வயிற்றினை ஒரு கத்தியால் அறுத்து, அந்த கருவை வெளியே எடுத்து கலைத்து விட்டனர் .இதனால் அந்த பெண் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட அரவிந்த் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். .