சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்யும் மனைவி… கூகுள் மேப் மீது புகார் கொடுத்த கணவர் !

 

சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்யும் மனைவி… கூகுள் மேப் மீது புகார் கொடுத்த கணவர் !

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்திவருகிறார். சந்திரசேகரின் மனைவி அவர் மீது சந்தேகம் கொண்டு தினமும் அவர் செல்போனில் உள்ள கூகுள் மேப் யுவர் டைம் லைனை தினமும் சோதனை செய்து வந்துள்ளார்.

சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்யும் மனைவி… கூகுள் மேப் மீது புகார் கொடுத்த கணவர் !

இதில் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்கு எல்லாம் அவர் போய் வந்ததாக கூகுள் மேப் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தினமும் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் அவர் மட்டுமின்றி, அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார். நேற்றுமுன்தினம் கூட அவர் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் சந்தேகப்பட்டு, கணவரும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்யும் மனைவி… கூகுள் மேப் மீது புகார் கொடுத்த கணவர் !

இந்நிலையில் சந்திரசேகரன் கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, தான் செல்லாத இடங்களை மேப்பில் காண்பித்து மன உளைச்சலை தருவதாக அந்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.