“என் மனைவியை கடத்திவிட்டார்கள் ” : காதல் கணவர் போலீசில் பரபரப்பு புகார்!

 

“என் மனைவியை கடத்திவிட்டார்கள் ” :  காதல் கணவர் போலீசில் பரபரப்பு புகார்!

கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யா காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். 35 வயதான இவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா(25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டில் தெரியவர அவர்கள் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் கார்த்திகேயன் பொருளாதார வசதி இல்லாததும், அவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவரும் என்று தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சக்தி தமிழினி பிரபா கடந்த 5 ஆம் தேதி கார்த்திகேயனை கோவையில் சுயமரியாதை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

“என் மனைவியை கடத்திவிட்டார்கள் ” :  காதல் கணவர் போலீசில் பரபரப்பு புகார்!

இந்நிலையில் கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 19-ஆம் தேதி என் மனைவியின் தாய், தந்தை மற்றும் சிலர் என் வீட்டிற்கு வந்து என்னையும், என் அம்மாவையும் தாக்கிவிட்டு சக்தி தமிழினி பிரபாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

“என் மனைவியை கடத்திவிட்டார்கள் ” :  காதல் கணவர் போலீசில் பரபரப்பு புகார்!

கார்த்திகேயன் மனைவி சக்தி தமிழினி பிரபாவின் தந்தை ஓய்வுபெற்ற காவலர் என்பதால் இதுகுறித்து இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.