மனைவி இறந்த வேதனையில், கணவர் தூக்கிட்டு தற்கொலை!

 

மனைவி இறந்த வேதனையில், கணவர் தூக்கிட்டு தற்கொலை!

ராணிபேட்டை

ராணிப்பேட்டை அருகே மனைவி இறந்த வேதனையில், விவசாயி தூக்கிட்டு செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 பெண்கள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். உமா கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருதுள்ளார்.

இதனால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததால் விரக்தி அடைந்த செல்வம், தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி இறந்த வேதனையில், கணவர் தூக்கிட்டு தற்கொலை!

இதுகுறித்து செல்வத்தின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் கலவை போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த வேதனையில், கணவர் தற்கொலை செய்துகொண்டது கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.