வாழப்பாடி அருகே கணவர் 2-வது திருமணம் செய்ததால், இளம்பெண் தற்கொலை!

 

வாழப்பாடி அருகே கணவர் 2-வது திருமணம் செய்ததால், இளம்பெண் தற்கொலை!

சேலம்

வாழப்பாடி அருகே தனக்கு தெரியாமல் கணவர் 2-வது திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன்(28). இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், நாமக்கல் மாவட்டம் மெட்டாலா கோரையாறு பகுதியை சேர்ந்த சிந்தாமணி (25) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யோகன்(4) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில், திருமணமான 1 வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக, சிந்தமாணி கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் தாயார் உயிரிழந்ததால் ஆதரவன்றி இருந்த சிந்தாமணி மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனிடையே, மணிவண்ணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

வாழப்பாடி அருகே கணவர் 2-வது திருமணம் செய்ததால், இளம்பெண் தற்கொலை!

இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிந்தாமணி வீட்டில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிந்தாமணி தூக்கில் சடலமாக தொங்கினார்.

இதுகுறித்து, சிந்தாமணியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.