மதுபோதையில் தகராறு செய்த கணவர் கழுத்தறுத்து கொலை… மனைவி வெறிச்செயல்!

 

மதுபோதையில் தகராறு செய்த கணவர் கழுத்தறுத்து கொலை… மனைவி வெறிச்செயல்!

சிவகங்கை

சிவகங்கை அருகே குடும்ப தகராறில் கணவரை கழுத்தறுத்துக் கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை அருகே உள்ள குட்டித்தின்னி பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயராணி. இவர் சிவகங்கை அரசு மருத்துமனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே, மதுப் பழக்கத்திற்கு அடிமையான ராஜாங்கம் மதுபோதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மதுபோதையில் தகராறு செய்த கணவர் கழுத்தறுத்து கொலை… மனைவி வெறிச்செயல்!

நேற்றிரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், விஜயராணியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில், ஆத்திரமடைந்த விஜயராணி, வீட்டில் இருந்த கத்தியால் ராஜாங்கத்தின் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சிவங்ககை மாவட்ட எஸ்.பி., செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, சிவகங்கை தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய விஜயராணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.