லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி…

 

லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி…

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கணவனும், மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் கீழ்ஆழத்தூர் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் புருசோத்தமன்(35) என்பவர் தனது மனைவி அம்முயுடன்(26) வேலூர் சிஎம்சி மருத்துவமனை எதிரில் உள்ளை கூனா ரெசிடென்சி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்.

லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி…

இந்நிலையில் லாட்ஜில் இன்று புருசோத்தமன் தூக்கிட்ட நிலையிலும் மனைவி கட்டிலில் இறந்த நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டனர். புருசோத்தமனின் அப்பா ஆறுமுகம்(75) உடல் நலக்குறைவு காரணமாக சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு முதல் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். தற்போது அறையை புருசோத்தமனின் சகோதரர் ராஜ்குமார் திறந்த பார்த்த போது இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடங்களை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.