கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை… நாமக்கல்லில் சோகம்!

 

கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை… நாமக்கல்லில் சோகம்!

கொரோனா பேரிடர் காலமானது கடந்த 5 மாதங்களாக தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை… நாமக்கல்லில் சோகம்!

வறுமையின் பிடியில், பசிக் கொடுமையில் மக்கள் வாடிவரும் நிலையில் கந்துவட்டி கொடுமை என்பது மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை. வங்கிகளில் வாங்கிய கடன்களை மக்களிடம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர் மட்டும் சரியாக வட்டி பணத்தை வாங்கிக் கொண்டு செல்லும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை… நாமக்கல்லில் சோகம்!

இந்நிலையில் நாமக்கல்லில் கந்துவட்டி கொடுமையால் நெசவுத் தொழிலாளியும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்த சேலம் அம்மாபேட்டை வைரவேல், ஆத்தூர் அய்யாசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கந்துவட்டி கொடுமையால் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி மனைவி மேனகா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.